For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் சோனியா கோவில் மர்ம நபர்களால் இடிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் காகித அட்டையால் கட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவிலை மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனி தெலுங்கானா அறிவித்த சோனியா காந்திக்கு தெலுங்கானா தொகுதி தோறும் கட்ட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மும்முரமாக இருக்கின்றனர். இந்நிலையில் கரீம் நகரில சுனில் ராவ் என்ற காங்கிரஸ் தொண்டர் சோனியாவுக்கு காகித அட்டையில் ஒரு கோவிலை கட்டி இருந்தார்.

இக்கோவிலை நேற்று இரவு சில மர்ம நபர்கள் இடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலையில் எழுந்து பார்த்த சுனில்ராவ் கோயில் இடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இப்புகார் மீது வழ்க்கு பதிவு செய்த போலீசார் கோவிலை இடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

English summary
Police registered a case against a group of hindu activists on Thursday for allegedly demolishing a 'temple' of Congress party's president Sonia Gandhi in Karimnagar town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X