உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் கவலையளிக்கிறது.... சோனியா காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பதான்கோட் தாக்குதல் சம்பவத்தையடுத்து , உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் கவலையளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பதான்கோட்டில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்களின் வீரத்துக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பதான்கோட் விமானப்படை தளத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுடன் 48 மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. இது போன்ற சம்பவங்களால், நாட்டு மக்களின் பாதுகாப்பும், விமானப் படை தளங்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை அளிக்கிறது.

Sonia Gandhi says internal security situation serious on Pathankot attack

இது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து உளவு அமைப்புகள் கொடுக்கும் எச்சரிக்கைகளை பின்பற்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்த்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பதான்கோட்டில் கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி கர்நாடகாவில் யோகா குறித்து பிரசாரம் செய்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்து விட்டதையே காட்டுகிறது. இந்த சம்பவத்தில் பாக்கிஸ்தானின் பங்கு குறித்து மத்திய அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+