நாட்டில் ஒரு நபர் ஆட்சி நடக்கிறது.. எம்.பி.க்கள் கூட்டத்தில், மோடி மீது சோனியா கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் பிரதமர் மட்டுமே ஆட்சி நடத்திவருகிறார், இங்கு ஒரு நபர் ஆட்சிதான் நடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டினார். தனது கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் சோனியா இவ்வாறு பேசினார்.

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க் கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி பேசுகையில்" நாட்டின் முந்தைய ஆட்சி பற்றி வெளி நாட்டு மண்ணில் பிரதமர் மோடி விமர்சித்து இருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. இதை ஏற்றுக் கொள்ள இயலாது. இதன் மூலம் அவர் தனது பதவியை சிறுமைபடுத்தி விட்டார். நாட்டுக்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்.

Sonia Gandhi slams PM Modi

பாரதிய ஜனதா அரசில் அனைத்து அதிகாரங்களும் ஒருவரது கையில்தான் இருக் கிறது. பிரதமர் அலுவலகமே அனைத்து அதிகாரத்தையும் வைத்து இருக்கிறது. அமைச்சர்கள் யாருக்கும் எந்தவித அதிகாரம் இல்லை. இந்த அரசு பிடிவாதம் பிடித்த அரசாகவும், ஆணவம் கொண்ட அரசாகவும் செயல்படுகிறது. மோடி அரசு பதவியேற்று ஓராண்டு ஆகிறது. வெறும் காட்சி பெட்டியாகவே இந்த அரசு இருக்கிறது.

இந்த ஒரு ஆண்டில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லை. புதிய வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. இரும்பு, சிமெண்ட், உரம், எண்ணை சுத்திகரிப்பு ஆகியவற்றில் உற்பத்தி குறைந்துள்ளது. நாட்டின் 8 முக்கிய கட்டமைப்புகளில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந் துள்ளது.உற்பத்தி துறையிலும், ஏற்றுமதி துறையிலும் முதலீடு குறைந்து வருகிறது. இவ்வாறு சோனியா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+