19ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும் சோனியா, ராகுல்.. டெல்லியில் குவியும் காங்கிரஸார்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் வரும் சனிக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
முன்னாள் பிரதமர் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை முறைகேடாக கைப்பற்றியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது சுப்பிரமணியசாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதையடுத்து வரும் சனிக்கிழமை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்கள்.. அவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகிறார்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்கப் போவதில்லை என்றும் தேவைப்பட்டால் அவர்கள் சிறை செல்ல தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அன்றைய தினம், காங்கிரஸ் முதல்வர்கள், மாநில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் பெறலாம். அதே நேரம் அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், நீதிமன்றம் அவர்களை சிறைக்கும் அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications