இந்திய ஜனநாயகத்தை சீரழித்துவிட்டார்... சோனியாவை அரக்கர்களோடு ஒப்பிட்டு பேசிய பாபா ராம்தேவ்
டெல்லி: இந்திய ஜனநாயகத்தை சீரழித்து விட்டதாக இந்து புராணத்தில் உள்ள அரக்கர்களோடு ஒப்பிட்டு பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ்.
சில தினங்களுக்கு முன்னர் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை தரக்குறைவாக பேசியதாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வரும் யோகா குரு பாப ராம்தேவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக லக்னோவில் ராம்தேவ் கூறியதாவது:-
இந்திய ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளையும் சோனியா காந்தி சீரழித்துவிட்டார். காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே 50 முதல் 60 வரையிலான சீட்களையே காங்கிரசால் பெறமுடியும்' என்றார்.
மேலும், இந்து புராணங்களில் உள்ள அரக்கன்களோடு சோனியாவை ஒப்பிட்டுபேசிய அவர், ராஜ்நாத் சிங் மற்றும் மோடியிடம் தற்போதையை ராவணன்களை கொள்ளும் படியும் சில இறக்குமதி செய்யப்பட்ட அரக்கன்களையும் கொல்லும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications