தோற்றவர்களின் புலம்பலாக இருக்கிறது ராகுல் பேச்சு: நிர்மலா சீதாராமன் 'பொளேர்'
டெல்லி: தோற்றுப் போனவர்களின் புலம்பலாகவே ராகுல் காந்தி பேச்சு இருக்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்ச்சித்து உரையாற்றினார் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்த பேச்சுக்கு உடனடியாக டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பதிலடி தந்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ராகுல் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதிலடி: இந்திரா காந்தி ஊடகங்களை முழுவதும் இருட்டடிப்பு செய்தார். இப்போது அவருடைய பேரன் ஊடக சுதந்திரம் குறித்து பேசுகிறார்.

1984 சீக்கியர் வன்முறை
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே முழுப் பொறுப்பு.

அமித்ஷா மீது அட்டாக்
பாஜக கொலை வழக்கு குற்றவாளியை தலைவராக்கி உள்ளது என்கிறார் ராகுல். நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது. அவருக்கு எதிராக சதிதிட்டம் தீட்டி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நிரூபிக்கமுடியவில்லை,

கண்டுகொள்ளாத காங்கிரஸ்
விவசாயிகள் பிரச்சனையில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது?. அவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக வாக்கை மட்டும் பார்க்கிறார்கள்.

விவசாயிகள் தற்கொலை
கர்நாடகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; அதைப்பற்றி காங்கிரஸ் பேசவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராகுல் காந்தியின் தோல்வி அடைந்தவர்களின் ஓலமாகத்தான் தெரிகிறது.. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்









Click it and Unblock the Notifications