'அம்மா'வுக்காக மைசூரில் இருந்து பெங்களூருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட எஸ்.பி. திவ்யஸ்ரீ

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை பிற கைதிகள் இருக்கும் இடத்தில் அல்லாமல் சிறை வளாகத்தில் உள்ள நிர்வாக பிளாக்கில் இருக்கும் வி.வி.ஐ.பி. அறையில் தங்க வைத்துள்ளனர். ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததும் அவரை பார்த்துக் கொள்வதற்காக மைசூர் மத்திய சிறையில் பணியாற்றிய எஸ்.பி. திவ்யஸ்ரீ பெங்களூர் சிறைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.
திவ்யஸ்ரீயின் கண்காணிப்பில் தான் ஜெயலலிதா உள்ளார். நிர்வாக பிளாக்கில் முதல் மாடியில் இருக்கும் வி.வி.ஐ.பி. அறைக்கு அருகில் தான் திவ்யஸ்ரீயின் அலுவலகம் உள்ளது.
ஜெயலலிதாவை திவ்யஸ்ரீ தான் கவனித்து வருகிறார் என்பதை கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications