For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாமில் "கர்பி விடுதலைப் புலிகள்" தாக்குதல்- எஸ்.பி., உதவியாளர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாமில் கார்பி மக்கள் விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவட்ட எஸ்.பி. நித்ய நந்தகோஸ்வாமி மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

அஸ்ஸாமின் கார்பி அங்லோங் மாவட்டத்தில் ரோங்தாங் வனப்பகுதியில் போலீஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டியிருந்தனார். அப்போது அங்கு வந்த கார்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் ஹாம்ரென் போலீஸ் நிலைய எஸ்.பி. நித்ய நந்தகோஸ்வாமி மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர். அவர்களது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம், அஸ்ஸாம் மாநில அரசிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.

English summary
A superintendent of police and another police man were killed in an encounter with militants of Karbi Peoples' Liberation Tigers (KPLT) in Karbi Anglong district of central Assam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X