பாஸ், உங்க காபியில் தினமும் எச்சிலை துப்பினேன்: தீயாக பரவும் ஊழியரின் போஸ்ட்
டெல்லி: அலுவலகம் ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்த வாலிபர் ஒருவர் தனது பாஸின் தொல்லை தாங்க முடியாமல் காபியில் தினமும் எச்சிலை துப்பிக் கொடுத்தது பற்றி துண்டு சீட்டில் எழுதி வைத்தது சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
அலுவலகம் ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்த வாலிபர் ஒருவரை அவரது பாஸ் ஓவராக அதிகாரம் செய்துள்ளார். காபி எடுத்துக் கொண்டு வருவது, பேப்பர் கொடுப்பது என்று அந்த வாலிபரை அவரது பாஸ் வேலைக்காரரை போன்று நடத்தியுள்ளார்.

இதனால் கடுப்பான அவர் வேலையை விட்டு சென்றுவிட்டார். வேலையை விட்டு செல்லும் முன்பு அவர் ஒரு சிறு துண்டு சீட்டில் எழுதி வைத்ததை பார்த்து அவரின் பாஸ் திடுக்கிட்டார்.
அந்த துண்டு சீட்டில் வாலிபர் எழுதியிருப்பதாவது,
இதை நீங்கள் படிக்கையில் நான் இங்கிருந்து சென்றிருப்பேன். என்னை அதிகாரம் செய்ததை நீங்கள் மிகவும் ரசித்தீர்கள் என்று நம்புகிறேன். அதனால் நீங்கள் பெருமிதம் கூட அடைந்திருப்பீர்கள். நான் தினமும் உங்களுக்கு கொடுத்த காபியில் எச்சிலை துப்பிக் கொடுத்தேன் என்பதை அறிந்த பிறகு எப்படி உணர்வீர்கள் என்று வியக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை வின் இன் ரோம் என்பவர் ரெட்டிட்டில் வெளியிட்டுள்ளார். இந்த துண்டு சீட்டு சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications