ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அசையும் சொத்துக்களை ஒப்படைக்க கோரி திமுக புதிய மனு

Subscribe to Oneindia Tamil

Special Court adjourns Jayalalithaa assets case to Dec 6
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி திமுக தாக்கல் செய்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.பி தாமரைச்செல்வன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம் மனு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பும் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த விசாரணையை டிசம்பர் 6ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+