இந்தியா - இலங்கை இடையிலான உறவு மேலும் வலிமை பெறும் - சிறிசேனா
கயா: வருங்காலத்தில் இந்தியா-இலங்கை இடையிலான உறவு மேலும் வலிமை பெறும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-இலங்கை இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து நேற்று பிற்பகல் உஜ்ஜைன் நகரின் அருகேயுள்ள நினோரா கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு விழாவை பிரதமர் மோடியுடன் மைத்ரிபாலா சிறிசேனா தனிமேடையில் அமர்ந்து கண்டுகளித்தார். இ
தன் பின்னர் மாலை இங்குள்ள இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்காரிகா தர்மபாலா சிலையை திறந்துவைத்து பேசிய சிறிசேனா,"இரு நாடுகளுக்கு இடையில் பல நூற்றாண்டுகளாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது.
கும்பமேளா விழாவிற்கான அழைப்பை நல்லெண்ணம் மற்றும் நட்பு அணுகுமுறையாகவே பார்க்கிறேன். எதிர்காலத்தில் இருதரப்பு உறவானது மேலும் வலிமையடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
மேலும், இந்தியா - இலங்கை இடையிலான உறவு வருங்காலத்தில் மேலும் வலிமைப் பெறும் என இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா காட்டும் அக்கறைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் இந்தியாவிற்குதான் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டது பிரதமர் மோடிக்கு நினைவிருக்கும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications