மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்தியா-இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: இலங்கை அதிகாரி
டெல்லி: தமிழக மீனவர்கள் ஐவருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை விவகாரம் குறித்து இலங்கை-இந்தியா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கை கொள்கை பயிற்றுநரக செயல் இயக்குநர் சமன் கெலேகாமா தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஐவர், போதை மருந்து கடத்தியதாக ஆதாரங்களை உருவாக்கிய இலங்கை அரசு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இந்தியா வந்திருந்த சமன் கெலேகமா டெல்லியில் கூறுகையில், "பக்கத்து நாட்டுக்காரர்கள் எப்போதுமே பிரச்சினையுடன் இருப்பது வாடிக்கைதான். தெற்காசியாவாக இருக்கட்டும், லத்தீன் அமெரிக்காவாக இருக்கட்டும், உலகமெங்குமே, அண்டை நாடுகளுக்குள் பிரச்சினைகள் இருப்பது சகஜம். இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பிரச்சினையும், அண்டை நாடுகளுக்கே உரித்தான தகராறுதான்.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டுமானால ்இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கடலில் தங்கள் நாட்டு எல்லையை மீறி மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்த விவகாரங்களை பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில், இலங்கைக்கான இந்திய தூதர், மீனவர்கள் அடைபட்டுள்ள சிறைக்குச் சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார். சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் மீட்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications