மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்தியா-இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: இலங்கை அதிகாரி
டெல்லி: தமிழக மீனவர்கள் ஐவருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை விவகாரம் குறித்து இலங்கை-இந்தியா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கை கொள்கை பயிற்றுநரக செயல் இயக்குநர் சமன் கெலேகாமா தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஐவர், போதை மருந்து கடத்தியதாக ஆதாரங்களை உருவாக்கிய இலங்கை அரசு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இந்தியா வந்திருந்த சமன் கெலேகமா டெல்லியில் கூறுகையில், "பக்கத்து நாட்டுக்காரர்கள் எப்போதுமே பிரச்சினையுடன் இருப்பது வாடிக்கைதான். தெற்காசியாவாக இருக்கட்டும், லத்தீன் அமெரிக்காவாக இருக்கட்டும், உலகமெங்குமே, அண்டை நாடுகளுக்குள் பிரச்சினைகள் இருப்பது சகஜம். இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பிரச்சினையும், அண்டை நாடுகளுக்கே உரித்தான தகராறுதான்.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டுமானால ்இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கடலில் தங்கள் நாட்டு எல்லையை மீறி மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்த விவகாரங்களை பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில், இலங்கைக்கான இந்திய தூதர், மீனவர்கள் அடைபட்டுள்ள சிறைக்குச் சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார். சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் மீட்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications