இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் 14-ந் தேதி டெல்லி வருகை
டெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக வரும் 14-ந் தேதி டெல்லி வருகிறார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அடுத்த மாதம் 8-ந் தேதி இந்தியா வருகை தரக் கூடும் என தெரிகிறது.
கடந்த ஜனவரியில் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அதேபோல ரணில் விக்ரமசிங்கேவும் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வரும் 14-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை ரணில் சந்தித்து பேசுகிறார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் 13-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று ரணில் ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார். அவரது டெல்லி வருகையின்போது 13-வது சட்டத் திருத்தம் குறித்தும், இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது மீனவர்கள் பிரச்சனை, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தலைமன்னாரையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதிபர் சிறிசேன
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா புத்தமத கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 8-ந் தேதி இந்தியா வருகை தரக் கூடும் எனவும் இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications