சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் தந்தையை சந்தித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
பெங்களூர்: ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் தந்தை முஸாபர் வானி பெங்களூருவில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
கடந்த 50 நாட்களாக ஜம்மு காஷ்மீர் முற்று முழுதாக முடங்கிப் போயுள்ளது. அங்கு ராணுவத்துக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவை அளித்து வருகிறது.
Muzaffar Wani, the father of Burhan Wani was in the ashram for the last 2 days. We discussed several issues. pic.twitter.com/IDyyxJSG83
— Sri Sri Ravi Shankar (@SriSri) August 27, 2016
இந்த நிலையில் பயங்கரவாதி புர்ஹான் வானியின் தந்தை முஸாபர் வானி பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய முஸாபர் வானி, சொந்த வேலையாக பெங்களூரு வந்த போது ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்தேன். அவர் அமைதியும் சமாதானத்திற்குமான நபர்; நான் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன்.
அவர் என்னிடம் காஷ்மீர் மக்கள் என்னதான் கேட்கின்றனர் என்றார். நான் அவரே காஷ்மீர் வந்து மக்களுடன் கலந்துரையாடி தெரிந்து கொள்ளட்டும் என்றேன்.
நீரிழிவு நோய் சிகிச்சைக்காக ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த முஸாபர் வானி, விடுதியில் தங்குவது பாதுகாப்பாக இருக்காது என்று ஆசிரமத்தில் தங்கியதாக கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications