"மாரடைப்பால் ஸ்ரீதேவி இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை"
மாரடைப்பால் ஸ்ரீதேவி இறந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video

மும்பை: துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
துபாயில் நடிகர் மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சிக்கு ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகளுடன் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

அக்கறை கொண்டவர்
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தனது உடல்நலத்தில் அக்கறையுடன் காணப்படும் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பா என்ற திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

உயிரிழந்ததாக அறிவிப்பு
இந்நிலையில் அவர் துபாய் ஹோட்டல் அறை பாத்ரூமில் பாத் டப்பில் அவர் மயங்கி கிடந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாக கூறப்படுகிறது.

எப்படி இறந்தார்?
ஆனால் அவர் மாரடைப்பினால்தான் இறந்தார் என்று அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது அவர் எப்படி இறந்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எந்த தகவலும் இல்லை
அவரது இறப்பு குறித்து போலீஸ் நடைமுறைகள், தடயவியல் நடைமுறைகள் நடைபெற்றதால் இதுகுறித்து அவரது குடும்பத்தினரோ, போலீஸாரோ, மருத்துவமனை நிர்வாகமோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications