ராஜிவ் கொலை வழக்கு: 'இந்தியா கேட்டுக் கொண்டால் கே.பி.யை இலங்கை அரசு நாடு கடத்தும்'
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி.யை இந்தியா கேட்டுக் கொண்டால் விசாரணைக்காக இலங்கை அரசு நாடு கடத்தும் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி ஏற்பாட்டாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி. தொடர்பான அனைத்து ஆதாரங்களும் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போதைய நிலையில் இலங்கையில் கே.பி. மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது இயலாத ஒன்றாகி விட்டது.

அதே நேரத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் உயிருடன் இருக்கும் ஒரே சந்தேக நபர் குமரன் பத்மநாதன் என்ற கே.பி.தான். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
ஆகையால் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் கே.பி.யை ஒப்படைக்க இந்தியா கோரினால் இலங்கை அரசு அதை செய்யும்.
இவ்வாறு ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் பின்னர் மலேசியாவில் இருந்த கே.பி. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டார். அப்போதும் இந்திய அதிகாரிகள் கொழும்பு சென்று கே.பி.யிடம் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியிருந்தனர்.
தற்போது கிளிநொச்சியில் போரில் மரணித்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள், பொதுமக்களின் குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களை கே.பி. நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications