ராஜிவ் கொலை வழக்கு: 'இந்தியா கேட்டுக் கொண்டால் கே.பி.யை இலங்கை அரசு நாடு கடத்தும்'
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி.யை இந்தியா கேட்டுக் கொண்டால் விசாரணைக்காக இலங்கை அரசு நாடு கடத்தும் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி ஏற்பாட்டாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி. தொடர்பான அனைத்து ஆதாரங்களும் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போதைய நிலையில் இலங்கையில் கே.பி. மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது இயலாத ஒன்றாகி விட்டது.

அதே நேரத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் உயிருடன் இருக்கும் ஒரே சந்தேக நபர் குமரன் பத்மநாதன் என்ற கே.பி.தான். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
ஆகையால் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் கே.பி.யை ஒப்படைக்க இந்தியா கோரினால் இலங்கை அரசு அதை செய்யும்.
இவ்வாறு ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் பின்னர் மலேசியாவில் இருந்த கே.பி. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டார். அப்போதும் இந்திய அதிகாரிகள் கொழும்பு சென்று கே.பி.யிடம் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியிருந்தனர்.
தற்போது கிளிநொச்சியில் போரில் மரணித்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள், பொதுமக்களின் குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களை கே.பி. நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications