ஜெயலிதாவுக்காக கர்நாடகத்திற்கு பல கோடி மக்கள் வரிப்பணத்தை அழப் போகும் தமிழக அரசு!
பெங்களூரு: கடந்த 12 வருடமாக கர்நாடகத்தில் நடந்து வந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குக்காக செலவிட்ட தொகையை தமிழக அரசிடமிருந்து பெறும் நடவடிக்கையை கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாம்.
தமிழக அரசு வழங்கப் போகும் இந்த செலவுத் தொகை முழுவதும் மக்களின் வரிப்பணம் என்பது மிக மிக கொடு்மையான ஒன்று.
2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையை முடித்த பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்றவர்களுக்குத் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நான்கு பேரும் பின்னர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து அதில் விடுதலையாகி விட்டனர். ஆனால் அந்தத் தீர்ப்பு தற்போது பெரும் நகைச்சுவைக்கிடமாக விட்டது.. காரணம் நீதிபதி குமாரசாமி போட்ட தப்புக் கணக்கால்.
இந்த நிலையில் கடந்த 12 வருடமாக இந்த வழக்கை நடத்தியற்காக ஆன செலவை தமிழக அரசிடமிருந்து பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்குக்கான செலவுத் தொகையை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும் என்று வழக்கை பெங்களூருக்கு மாற்றியபோது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது வழக்குக்காக செலவிட்ட தொகையை தமிழக அரசிடமிருந்து வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு பெர்சனல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்ததும் அது தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு பணத்தைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படும். இதுவரை தமிழக அரசிடமிருந்து ஒரு பைசா கூட நாங்கள் வாங்கவில்லை.
மேலும் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வழக்கறிஞருக்கான கட்டணத்தையும் தமிழக அரசுதான் தர வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்க முன்பு, கர்நாடக அரசின் பெர்சனல் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மாநில அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதன்படி இதுவரை கர்நாடக அரசுக்கு ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை செலவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்ததாம். ஆனால் அதில் பல செலவுக் கணக்கை சேர்க்காமல் விட்டு விட்டதாக கூறி மாநில அரசு அந்த அறிக்கையை திருப்பி அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அழப் போகும் தொகை பல கோடிகள் என்பது வேதனைக்குரியது, சிந்தனைக்குரியது!
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications