ஜெயலிதாவுக்காக கர்நாடகத்திற்கு பல கோடி மக்கள் வரிப்பணத்தை அழப் போகும் தமிழக அரசு!
பெங்களூரு: கடந்த 12 வருடமாக கர்நாடகத்தில் நடந்து வந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குக்காக செலவிட்ட தொகையை தமிழக அரசிடமிருந்து பெறும் நடவடிக்கையை கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாம்.
தமிழக அரசு வழங்கப் போகும் இந்த செலவுத் தொகை முழுவதும் மக்களின் வரிப்பணம் என்பது மிக மிக கொடு்மையான ஒன்று.
2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையை முடித்த பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்றவர்களுக்குத் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நான்கு பேரும் பின்னர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து அதில் விடுதலையாகி விட்டனர். ஆனால் அந்தத் தீர்ப்பு தற்போது பெரும் நகைச்சுவைக்கிடமாக விட்டது.. காரணம் நீதிபதி குமாரசாமி போட்ட தப்புக் கணக்கால்.
இந்த நிலையில் கடந்த 12 வருடமாக இந்த வழக்கை நடத்தியற்காக ஆன செலவை தமிழக அரசிடமிருந்து பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்குக்கான செலவுத் தொகையை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும் என்று வழக்கை பெங்களூருக்கு மாற்றியபோது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது வழக்குக்காக செலவிட்ட தொகையை தமிழக அரசிடமிருந்து வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு பெர்சனல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்ததும் அது தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு பணத்தைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படும். இதுவரை தமிழக அரசிடமிருந்து ஒரு பைசா கூட நாங்கள் வாங்கவில்லை.
மேலும் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வழக்கறிஞருக்கான கட்டணத்தையும் தமிழக அரசுதான் தர வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்க முன்பு, கர்நாடக அரசின் பெர்சனல் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மாநில அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதன்படி இதுவரை கர்நாடக அரசுக்கு ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை செலவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்ததாம். ஆனால் அதில் பல செலவுக் கணக்கை சேர்க்காமல் விட்டு விட்டதாக கூறி மாநில அரசு அந்த அறிக்கையை திருப்பி அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அழப் போகும் தொகை பல கோடிகள் என்பது வேதனைக்குரியது, சிந்தனைக்குரியது!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications