பசு சார்ந்த வன்முறைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு.. ஜாதி, மத சாயம் பூச கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கக்கோரி, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தென்சன் பூனாவாலா உள்ளிட்ட சிலர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கன்வில்கர், சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"எவர் ஒருவரும் சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கூடிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. பசு சார்ந்த வன்முறைகளை ஒரு மதத்தினுடைய அல்லது சாதியினுடன் பொருத்திப் பார்க்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர் என்பவர் பாதிக்கப்பட்டவரே, அவ்வளவுதான்" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கின், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கடுமையான ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் இந்த உத்தரவை ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை, மகாத்மா காந்தியின் வம்சாவழியை சேர்ந்த தருண் காந்தி என்பவர் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்ட மூன்று மாநிலங்களும், மத்திய அரசும் தங்கள் பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசுகள் சம்மந்தப்பட்டது என கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications