பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது... ஆதார் ஆணையம் அறிவிப்பு
பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி: பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் அட்டைகள் மட்டுமே செல்லும் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் கார்டு குறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ரூ. 50 , ரூ. 300 அல்லது அதற்கு மேல் பணத்தை வசூல் செய்து கொள்ளும் சில ஆதார் கார்டு ஏஜென்சிகள் அவற்றை பிளாஸ்டிக் மற்றும் பிவிசி ஷீட்களில் அச்சடித்து கொடுக்கின்றன. இதுபோன்று நமது விவரங்களை அச்சிட்டு ஆதார் கார்டு என்று கூறும் இந்த கார்டு தேவையில்லாத ஒன்றாகும்.

அரசால் வழங்கப்படும் ஆதார் கார்டோ அல்லது பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் கார்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் ஆதார் அட்டை வைத்திருப்போர் ஆதார் கார்டை பிளாஸ்டிக் அட்டையில் அச்சடிக்கவோ லேமினேஷன் செய்யவோ பணம் கொடுத்து ஸ்மார்ட் ஆதார் கார்டு வாங்குவதோ தேவையில்லை. இதுபோன்று ஒரு நடைமுறையை அரசு கடைபிடிக்கவில்லை.
ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் https://eaadhaar.uidai.gov.in என்ற இணையதள முகவரியில் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளாஸ்டிக் கார்டுகளில் தயார் செய்யப்படும் ஆதார் கார்டுகள் மூலம் மக்களின் விவரங்கள் திருடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே கடைகளில் சென்று ஆதார் கார்டு பெற்றுக் கொள்வதை தவிருங்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications