ரூபாய் நோட்டு உத்தரவுக்கு எதிரான வழக்குகளுக்கு தடை.. சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூபாய் நோட்டு உத்தரவுக்கு எதிரான அனைத்து வகை மனுக்கள் மீதான விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

பல்வேறு ஹைகோர்ட்டுகளிலும் பொது நல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் தம்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடத்துவதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிலும் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு அது குறித்த விசாரணை நடந்து வருகிறது. மத்திய அரசை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நோட்டு தொடர்பான உத்தரவை ரத்து செய்ய கோர்ட் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications