For Daily Alerts
Just In
கருப்பு கொடிகள், கற்களால் அச்சுறுத்த முடியாது- குஜராத் தாக்குதல் தொடர்பாக ராகுல்
கருப்பு கொடிகளாலும் கற்களாலும் அச்சுறுத்த முடியாது என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அகமதாபாத்: கருப்பு கொடிகள் மற்றும் கற்களால் எங்களை அச்சுறுத்திவிட முடியாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
குஜராத் பெருமழை வெள்ள பாதிப்புகளை ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். அப்போது பனஸ்கந்தா பகுதியில் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடியும் காட்டப்பட்டது. பனஸ்கந்தா மாவட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கர்நாடகா ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளதற்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடி ஜி, கோஷங்கள், கருப்பு கொடிகள், கற்களால் எங்களை அச்சுறுத்திவிட முடியாது. எங்களது மக்களுக்கான பணி எப்போதும் தொடரும் என கூறியுள்ளார்.
English summary
Congress Vice President Rahul Gandhi tweeted that, "Narendra Modi ji, slogans, black flags and stones will not deter us...We will put in all our might into the service of people".
Story first published: Friday, August 4, 2017, 21:45 [IST]