For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு.. 12000 பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி

மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்- வீடியோ

    ஹைதராபாத்: மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பட்ஜெட்டிலும் ஆந்திர மாநிலத்துக்கான எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

    Strike in Andra pradesh for Demanding special status

    இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசுடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்டது. இந்நிலையில் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர பிரதேச பிராத்யேக ஹூடா சாதானா சமிதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆந்திராவில் முழு அடைப்பு காரணமாக 12 ஆயிரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

    English summary
    Strike in Andra pradesh for Demanding special status. 12000 buses not operated. People suffers in Andra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X