ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை எழுப்பும் சந்தேகங்கள்
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Recommended Video

மும்பை : இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பாத்டப்பில் முன்கூட்டியே தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டது எப்படி, நிதானம் இல்லாத அளவிற்கு குடிக்கும் பழக்கம் உள்ளவரா ஸ்ரீதேவி என்று பல மர்ம முடிச்சுகள் ஸ்ரீதேவி மரணத்தில் விழுந்துள்ளன.
ஸ்ரீதேவிக்கு 54 வயது என்று சொன்னால் யாரும் எப்படி நம்பமாட்டார்களோ, அப்படித் தான் அவர் உயிர் இழந்த செய்தியையும் பலர் நம்பவில்லை. முதலில் இது வெறும் வதந்தியாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில் உண்மையிலேயே நடிகை ஸ்ரீதேவி துபாயில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரே அறிவித்தனர்.

தனது உடல் அழகிலும், ஆரோக்கியத்திலும் மிகவும் அக்கறை கொண்டவராக வலம் வந்த ஸ்ரீதேவியா மாரடைப்பில் உயிரிழந்தார் என்று பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கேட்டனர். இவர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஸ்ரீதேவிக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை.
திடீர் மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஆக்சிடெண்டல் ட்ரௌனிங் அதாவது எதிர்பாராத மயக்கம் ஏற்பட்டு குளியல் தொட்டிக்குள் நிலைகுலைந்து விழுந்ததில் ஸ்ரீதேவிக்கு அந்த கனமே உயிர் பிரிந்திருக்கலாம் என்று மருத்துவ விளக்கங்கள் கூறுகின்றன.
துபாய் தடயவியல் துறையின் இந்த அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. ஸ்ரீதேவியை இரவு உணவு சாப்பிட வெளியே செல்லலாம் என்று கணவர் போனி கபூர் கூறியதால் முகம் கழுவ பாத்ரூம் சென்ற ஸ்ரீதேவி 15 நிமிடங்களாகியும் வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்த போது அவர் பாத் டப்பில் மயங்கி கிடந்ததாக செய்திகள் வெளிவந்தன.
நிதானம் இல்லாத அளவிற்கு மது அருந்தி இருந்தவரை அதுவும் பிரபல நடிகை இந்த நிலையில் வெளியே செல்ல ஒப்புகொண்டிருப்பாரா என்பது முதல் சந்தேகம். அவர் இந்த அளவிற்கு மது போதையில் இருந்தது தெரிந்தும் அவரை ஏன் போனி கபூர் வெளியே செல்ல அழைத்தார் என்பது இரண்டாவது சந்தேகம்.
பாத்ரூம் டப்பில் ஸ்ரீதேவி விழுந்திருந்தால் உடனடியாக அலறல் சிறு சத்தமாவது கேட்டிருக்கும். அப்படி சத்தம் கேட்டு உடனடியாக கதவை உடைத்து பார்க்காமல் 15 நிமிடங்கள் கழித்தே ஸ்ரீதேவி வரவில்லை என்று கதவை உடைத்து பார்த்ததாக சொல்வதும் அடுத்த சந்தேகத்தை கிளப்புகிறது.
இதில் மற்றொரு பார்க்கப்பட வேண்டிய விஷயம், ஸ்ரீதேவி வெளியே செல்ல புறப்படத் தான் குளியல் அறையில் முகம் கழுவ சென்றார் என்றால் பாத் டப்பில் முன்கூட்டியே தண்ணீர் இருந்தது எப்படி. பொதுவாக பாத்டப்பில் குளிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே தண்ணீர் நிரப்பப்படும் ஆனால் ஸ்ரீதேவி சென்ற சமயத்தில் பாத்டப்பில் தண்ணீர் ரெடிமேடாக நிரப்பி வைக்கப்பட்டதன் மர்மமும் புரியவில்லை.
மற்றொரு புறம் இறப்புக்கான காரணம் மயக்கம் என்று பிரதே பரிசோதனை அறிக்கை சொல்கிறது. மயங்கி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருக்கிறார் ஸ்ரீதேவி அதனால் மூச்சுத்திணறல் என்று கூறினாலும் அறிக்கையில் தற்செயலான என்ற வார்த்தை எப்படி பிரேத பரிசோதனை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications