காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக.. வாட்ஸ்அப்பில் ராஜினாமா கடிதம் அனுப்பிய எஸ்.ஐ!
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறை கணினிமயமாக்கப்பட்டு 176 போலீஸ் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக 'வாட்ஸ்-அப்'புடனும் இந்த அவசர உதவி எண் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு இந்த எண்ணுக்கு கான்பூர் டீகட் மாவட்ட, ரசுலாபாத் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வினோத் குமார் 'வாட்ஸ்-அப்' மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
மேலதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியாததால் தனது பணியை ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒழுங்கீனமாக, ராஜினாமா கடிதம் அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டரிடம், விசாரிக்க மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐ.ஜி. அஷுதோஷ் பான்டே, தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications