அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம்
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார் என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புவனேஷ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் நேற்று ஜர்சுகுடா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு சென்றபோது காவல் அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.
ஒடிசா மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் நபா கிஷோர் தாஸ். இவர் நேற்று தலைநகர் புவனேஷ்வரில் இருந்து ஜர்சுகா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டார்.
அப்போது அவரது இடது மார்பு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் தனது இரு கரங்களால் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு புவனேஷ்வரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications