ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும்...; சொல்கிறார் சு.சுவாமி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இன்று டெல்லி ஐ.ஐ டி.யில் நடந்த விழாவில் பங்கேற்று பேசும் போது, இந்திய கலாச்சாரம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் சகிப்புத்தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டியது அவசியம். சகிப்புத்தன்மையின்மை , பாதுகாப்பின்மைக்கு சமமாகும் எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்க கூடாது. மாற்று கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

Subramanian Swamy condemned to Rbi governor

சகிப்புத் தன்மையும், ஒருவருக்கொருவர் வழங்கும் பரஸ்பர மதிப்பும் நல்ல சமத்துவமான சூழலை உருவாக்கும். ஒரு விஷயத்தில் தடை என்பது யாருக்கும் தீர்வாக மாற முடியாது. அரசியல் ரீதியான தவறான வழிகாட்டுதல்கள் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும்.

நாட்டில் கருத்து சுதந்திரம், விவாதம், மற்றும் சுய உரிமை இவை யாவும் அவசியம் இவை பராமரிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் . உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

இவரது இந்த பேச்சுக்கு பா. ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார், இவர் தனது டுவிட்டரில் , ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும் பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+