அரசு வக்கீல் பவானி சிங் பல்டி அடித்தது ஆச்சரியமா இருக்கு.. சுப்பிரமணிய சாமி
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் வழக்கில், திடீரென அரசு வக்கீல் பல்டி அடித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியும், பாஜகவில் சமீபத்தில் இணைந்தவருமான சுப்பிரமணியன்சுவாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: கர்நாடக ஹைகோர்ட் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு உள்ள அறிவுரையாளர்கள் தவறாக அவரை வழி நடத்துகிறார்கள். ராம் ஜெத்மலானி போன்ற மூத்த வக்கீல் கூட எதற்காக, அவசரப்படுகிறார் என்பது தெரியவில்லை. இது ஊழலுக்கு எதிரான ஒரு வழக்கு. மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவை நான் எதிர்பார்த்தேன். ஆனால், அரசு வக்கீல் நிபந்தனை ஜாமீன் வழங்க தனக்கு ஆட்சேபனை இல்லை என்று பல்டி அடித்ததைதான் நான் எதிர்பார்க்கவில்லை. அதுதான் எனக்கு ஆச்சரியம் அளித்தது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications