டெல்லி திஹார் சிறையில் கான்பரன்ஸ் அறைக்கு மாற்றப்பட்டார் சுப்ரதா ராய்!

முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற ரூ. 20,000 கோடியை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக சஹாரா சுப்ரதா ராய் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ரூ. 5,000 கோடி ரொக்கமாகவும், ரூ. 5,000 கோடிக்கு வங்கி உத்தரவாதமாகவும் அளித்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து அவர் லண்டன், நியூயார்க்கில் உள்ள தனது நட்சத்திர ஹோட்டல்களை விற்பதற்கு வசதியாக திஹார் சிறையில் உள்ள கான்பரன்ஸ் அறையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படியும், காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக மடிக்கணினி, இணைய தள இணைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கான செலவை சஹாரா நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்றும் சுப்ரதா ராயின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அவரது இந்தக் கோரிக்கையை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான பெஞ்ச் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தது. ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 10 வேலை நாட்கள் அவரை கான்பரன்ஸ் அறையை பயன்படுத்திக்கொள்ள சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கான்பரன்ஸ் அறையை சுப்ரதா ராய் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அங்கு அவர் மாற்றப்பட்டார். அவருடன் சிறையில் உள்ள சஹாரா குழும அதிகாரிகள் அசோக் ராய், ரவி சங்கர் துபே ஆகியோரும் பலத்த பாதுகாப்புடன் கான்பரன்ஸ் அறைக்கு மாற்றப்பட்டனர்.
அந்த அறையில் சஹாரா குழுமத்தின் பணியாளர்கள் சுப்ரதரா ராயை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications