கள்ளக்காதலுக்கு மறுத்த பெண்.. 3 குழந்தைகளின் தாய் என்றும் பாராமல் மனிதவெடிகுண்டாக மாறிய வியாபாரி
Recommended Video
வயநாடு: கள்ளக்காதலுக்கு பெண் ஒப்புக் கொள்ளாததால் மனித வெடிகுண்டாக மாறி அந்த பெண்ணையும் கொன்று தானும் உடல் சிதறி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ளது நாய்கட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவருடைய மனைவி அமலா (37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நாசர் அதே பகுதியில் கணினி மையத்தை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் பென்னி (47) பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நாசர் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டார்.
ஏன் இப்படி இருக்காங்க.. இதெல்லாம் தேவையா.. பேசாம இணைஞ்சுடலாமே.. அதிமுக, அமமுகவில் குமுறல்
தகவல்
அப்போது அவரது வீட்டில் பயங்கர சப்தத்துடன் குண்டுவெடித்தது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பென்னியும், அமலாவும் உடல் சிதறி இறந்து கிடந்தனர். இதுகுறித்து சுல்தான்பத்தேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
காதல்
சிதறி கிடந்த உடல்பாகங்களை மீட்ட போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கூறுகையில், நாசர் மனைவி அமலா மீது பென்னிக்கு காதல் மலர்ந்துள்ளது. இதை அவர் பலமுறை அமலாவிடம் கூறியுள்ளார்.
காதலை வெளிப்படுத்திய பென்னி
ஆனால் அதை அமலா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பென்னி அவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். இதனால் நாசர் பள்ளிவாசலுக்கு சென்றவுடன் அமலாவின் வீட்டுக்கு சென்ற பென்னி மீண்டும் ஒரு முறை தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
உடல் சிதறி
ஆனால் அமலா அதை ஏற்கவில்லை. இதனால் அமலாவை கட்டிப்பிடித்தபடி தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை பென்னி வெடிக்கச் செய்துள்ளார். இதனால் இருவரும் உடல் சிதறி பலியாகிவிட்டனர்.