மனைவி சுனந்தா மரணம்: போலீசாரின் அறிக்கைக்காக காத்து இருக்கிறேன் சசிதரூர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனது மனைவி சுனந்தா மரணம் குறித்த போலீசாரின் அறிக்கைக்கு தாம் காத்து இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூர் 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ந்தேதி காதல் மணம் செய்தார்.

 Shashi Tharoor

ஆனால் திடீரென சசிதரூருடன், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இதில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் சுனந்தா மரணத்துக்கு விஷமே காரணம் என்று மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட புதிய பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் முதல் நாளே கூறி இருந்தேன் போலீசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக. நான் போலீசாரின் அறிக்கைக்காக காத்து இருக்கிறேன். இதுவரை போலீசார் என்னிடம் எதுவும் கேட்டது கிடையாது.நான் முதல் நாள், என்ன கூறினேனோ இப்போதும் அதேயே கூறுகிறேன் என்று உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+