வாழ்க்கை நிலையில்லை என்று கூறிய சுனந்தா: 3 மாதத்திற்கு முன்பே உயில் எழுதி வைப்பு
டெல்லி: திடீர் என்று மரணம் அடைந்த மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் 3 மாதங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்துள்ளார்.
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 17ம் தேதி இரவு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மன அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுனந்தா 3 மாதங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
சுனந்தா தனது நண்பரும், வழக்கறிஞருமான ரோஹித் கொச்சார் உதவியுடன் 3 மாதங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்துவிட்டார். வாழ்க்கை நிலை இல்லை என்று அவர் அப்போது ரோஹித்திடம் தெரிவித்துள்ளார். சுனந்தாவின் உடல் நிலை சரியில்லாததால் தான் அவர் வாழ்க்கை நிலையானது இல்லை என்று கூறியதாக ரோஹித் தெரிவித்துள்ளார்.
சுனந்தாவுக்கு ரூ.112 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. அவரது கணவர் சசி தரூருக்கு ரூ.6.34 கோடிக்கு சொத்து உள்ளது.












Click it and Unblock the Notifications