இறப்பதற்கு முன்பு சுனந்தா கை நிறைய மாத்திரைகளை சாப்பிட்டார், உளறித் தள்ளினார்: நண்பர்
டெல்லி: இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா ஆல்பிராக்ஸ் உள்பட கைநிறைய மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக அவர் உளறினார் என்று அவருக்கு நெருக்கமான நண்பர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுனந்தா உடலில் ஆல்பிராக்ஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தூக்கமின்மையால் தவித்ததாகவும், ஆல்பிராக்ஸ் எடுத்துக் கொண்டதாகவும் தரூர் தெரிவித்தார்.
இந்நிலையில் சுனந்தாவின் நெருங்கிய நண்பரான தேஜ் சராப்(77) இது குறித்து செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம் கூறுகையில்,

சுனந்தா
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதாவது அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரும், அவரது கணவரும் எனது கோவா வீட்டுக்கு வந்தனர்.

மயக்கம்
சுனந்தா சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அவர் கடற்கரையில் ஒரு முறை, படகில் ஒரு முறை என்று 2 தடவை மயங்கி விழுந்தார்.

ஆல்பிராக்ஸ்
சுனந்தா கை நிறைய மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு நான் சரியாகத் தூங்குவது இல்லை. நான் தூங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் நான் ஆல்பிராக்ஸ் மற்றும் வலி நிவாரணிகளை எடுத்து வருகிறேன் என்றார். இது உடல்நலத்திற்கு மிகவும் கேடு என்று நான் அவரிடம் கூறினேன்.

புஷ், மன்மோகன்
சுனந்தா ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டார். சம்பந்தமே இல்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக சுனந்தா உளறினார் என்றார் சராப்.

மருத்துவர்கள்
இறப்பதற்கு முன்பு சுனந்தா ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவர் எந்த நோய்க்காகவும் மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications