புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து- ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம்!
டெல்லி: காலிஸ்தான் விடுதலை இயக்கததைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
1993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. புல்லரின் தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்ற பஞ்சாப் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆனால் சில தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டதால் அதன் பலனை கைதிகளுக்கு அளித்து அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 21-ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அத் தீர்ப்பை தமது கணவர் விவகாரத்திலும் பொருந்தச் செய்ய வேண்டும் என்று புல்லரின் மனைவி மீண்டும் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தட்டூ, சூதான்சு ஜோதி முகோபாத்யாய அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
அப்போது புல்லரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க மத்திய அரசு தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையின் போது புல்லரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications