உச்சநீதிமன்ற உத்தரவை மதித்தே ஆக வேண்டும்.. காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு நீதிபதிகள் சாட்டையடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா சரியாக நிறைவேற்றவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

Supreme Court expresses displeasure over Karnataka in the Cauvery issue

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

நீதிபதிகள் கூறியது: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா உரிய வகையில் செயல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவிட்டால் நாட்டு மக்களும், அரசு அதிகாரிகளும் அதை செயல்படுத்தியே தீர வேண்டும். அந்த உத்தரவு நீதிமன்றத்தால் மாற்றப்பட்டால் தவிர, உத்தரவை மதிக்க வேண்டிய கடமை அனைத்து தரப்புக்கும் உள்ளது.

ஒருமுறை கோர்ட் ஆர்டரை பிறப்பித்துவிட்டால் அதை நிறைவேற்ற வேண்டும், அல்லது அதை மாற்றியமைக்க மனு செய்யலாம். இவ்விரு வாய்ப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. அதை தவிர்த்துவிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை தங்கள் கைகளில் எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கர்நாடகா தரப்பை கண்டித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+