தமிழக அரசின் பதில் மனுவுக்கு விளக்கம். தேமுதிக எம்எல்ஏக்களுக்கு அவகாசமளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி : சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எம்எல்ஏக்களுக்கு காலஅவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோகன் ராஜ், சதீஷ்குமார், பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக கூறியும், பேரவைத் தலைவரை தாக்க முயற்சி செய்ததாக கூறியும், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பேரவைத் தலைவர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இடைநீக்கம் செய்யப்பட்ட 6 பேரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், பேரவைத் தலைவரை தாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் இடைநீக்கம் சட்டத்திற்கு உட்பட்டு, உரிமைக் குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. சட்டப்பேரவை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எம்எல்ஏக்களின் 6 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications