For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுமா சுப்ரீம் கோர்ட்? விவசாயிகள் எதிர்பார்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காவரி நடுவர்மன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட நீர் போதாது என்று கூறி அதை எதிர்த்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. காவிரி நடுவர் மன்றம் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஈடான அதிகாரம் உள்ளது என்பதால்,சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முதலில் கோர்ட்டில் வாதம் நடந்தது. மத்திய அரசோ அதிகாரம் கிடையாது என்றது, மாநில அரசுகளோ அதிகாரம் உண்டு என்றன.

Supreme court mat insist to set up Cauvery management board

விசாரணை நடத்திய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவாராய் கன்வில்கர் ஆகியோர் இன்று அளித்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுமதியுண்டு என கூறியுள்ளனர்.

இந்த அமர்வுதான் ஏற்கனவே அக்டோபர் 4ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டிருந்தது. எனவே, டிசம்பர் 15ம் தேதி இந்த வழக்கில் முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக கூறியுள்ள நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கவும் மீண்டும் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Supreme court mat insist to set up Cauvery management board in coming days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X