For Daily Alerts
Just In
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா? சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா என அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 13-ம் தேதி நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English summary
Supreme court notice to all approved parties in the convicted criminals case.
Story first published: Thursday, July 5, 2018, 19:47 [IST]