என்.ஜி.ஓ. க்களின் வரவு செலவு கணக்கு... தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: தொண்டு நிறுவனங்கள் தங்களின் வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததா, இல்லையா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழகம் மற்றும் தெலுங்கனாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அன்னா ஹசாரே நடத்தும் சுவாரஜ் அறக்கட்டளையின் பணத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நாட்டில் உள்ள அனைத்து தொண்டு நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகள் குறித்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகளை பெற்று தாக்கல் செய்யும்படி சிபிஐ கேட்டிருந்தது. இதற்கு பல மாநிலங்களில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல் தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அகர்வால் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று நடந்தது. அப்போது சிபிஐ தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

20 மாநிலங்களில்..
20 மாநிலங்களில் உள்ள 22 லட்சத்து 39 ஆயிரத்து 971 தொண்டு நிறுவனங்களில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 428 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே தங்களின் மாநில அரசுகளிடம் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் உள்ள 5 ஆயிரத்து 684 தொண்டு நிறுவனங்களில், 50 நிறுவனங்கள் மட்டுமே வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளன.

தகவல் தந்தவை..
அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஒரு பகுதி தகவல்களை மட்டுமே அனுப்பியுள்ளன. அந்த மாநிலங்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில்..
அஸ்ஸாமில் உள்ள 97, 437 தொண்டு நிறுவனங்களில் ஒன்று கூட தங்களின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. கோவா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தொண்டு நிறுவனங்கள் தங்களின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

தமிழ்நாடு- தெலுங்கானா..
தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தொண்டு நிறுவனங்களின் வரவு, செலவு கணக்குகளை பெற்றதா இல்லையா என தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அரசின் சலுகை கூடாது
அப்போது வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பத்வாலியா, கடந்த 3 ஆண்டுகளின் வரவு, செலவு கணக்குகளை, தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால், அவைகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கக்கூடாது என்றார். அனைத்து விவரங்களையும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மேலும், சிபிஐ கேட்ட விவரங்களை அளிக்காதது ஏன், தொண்டு நிறுவனங்கள் வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததா, இல்லையா என்பது குறித்து பதில் அளிக்க தமிழ்நாடு, தெலுங்கானா அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications