தெலுங்கானாவுக்கு தடை கோரிய 9 மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா தனி மாநில பிரிவினைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
தெலுங்கானா பிரச்சினை நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளது. இதனிடையே தெலுங்கானா பிரிவினைக்கு எதிராக சீமாந்திராவைச் சேர்ந்த தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 9 மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இம்முடிவால் சீமாந்திரா தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications