மணிப்பூரில் மீண்டும் இண்டர்நெட் சேவை முடக்கம் நீட்டிப்பு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் நீடிப்பதால் ஜூலை 20-ந் தேதி வரை இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூர் இணையசேவை தடை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இவ்வன்முறைகளில் 200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

மணிப்பூர் வன்முறை தொடங்கிய முதலே இம்மாநிலத்தில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் பரவாமல் தடுக்க இணையசேவை முடக்கத்தை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த தடையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. ஏற்கனவே ஜூலை 14 வரை இணைய முடக்கம் அமலில் இருந்தது. தற்போது இந்த முடக்கமானது ஜூலை 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிஅ அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உலகத்திலேயே மணிப்பூர் மாநில அரசுதான் இணையத்தை முடக்குகிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருக்கிறது.
இதனிடையே மணிப்பூர் இணைய முடக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவை முடக்கம் தொடர்ந்து அமலில் இருப்பதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. மாநிலத்தில் இணைய சேவை தடையால் பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி சேர்க்கைகளில் பாதிப்பு, ஆன்லைன் மூலம் கட்டணங்கள் கட்டுவது பாதிப்பு என தொடருகிறது என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், இணையசேவையை படிப்படியாக குறிப்பிட்ட இடங்களில் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதில், மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால்தான் இணையசேவை முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்திருந்தது. இம் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications