அவதூறு இல்லாமல் பேசலாமே.. அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
டெல்லி: கிரிமினல் அவதூறு வழக்கு தொடரும் நடைமுறைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிரிமினல் அவதூறு தொடர்பான, இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள், 499, 500 ஆகியவற்றை நீக்க வேண்டுமென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக எம்.பி, சுப்ரமணியன் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவதூறு வழக்கு என்பது, அரசியல் சாசன சட்டப் பிரிவு 19(2)-க்கு எதிரானது, பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வழக்கில் கருத்து தெரிவித்த தமிழக அரசு, இந்திய குற்றவியல் சட்டத்தில், கிரிமினல் அவதூறு சட்ட வழிவகைகள் அவசியம் தேவை. பொதுவாழ்வில் ஈடுபடுபவரின் புகழ், கவுரவத்தை காப்பதோடு, பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 19(2)ல் பேச்சுரிமை என்பது அவதூறு தன்மை அல்லாத பேச்சுரிமையைத் தான் குறிக்கிறது. எனவே இந்த அவதூறு சட்டங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ஐ மேற்கோள்காட்டி, அடுத்தவர் மனம் காயப்படும்படியும், அடுத்தவர் மாண்பினை சீர்குலைக்கும் வகையிலும் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும் அவதூறு எனவே, கிரிமினல் அவதூறு வழக்கு சட்ட நடைமுறைகள் சரியானதே என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications