Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதென்ன அதிசயம்? கேஷூவலா.. சுடுகாட்டிலிருந்து எழுந்து வந்த பெண்.. தெறித்த கூட்டம்.. கடைசியில டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: கல்லறையில் ஒரு பாட்டி திடீர்னு கண் திறந்துட்டாங்க.. மொத்த பேரும் பதறி அடித்து ஓடிவிட்டார்கள்.. என்னாச்சு தெரியுமா?

ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்திலுள்ளது பெர்ஹாம்பூர் என்ற நகரம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த பாட்டி.. கடந்த பிப்ரவரி 1ம் தேதி, தன்னுடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாராம்.

Surprise Incident in Odisha and Do you know who is the Old woman, what happened before in cremation

தீப்பிடிப்பு: ஸ்டவ் அருகே நின்று சமைத்து கொண்டிருந்தபோது, அப்போது எதிர்பாராதவிதமாக, தீப்பிடித்து கொண்டது.. இதனால், அந்த பெண்ணின் உடையிலும், தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.. இதனால் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, அவரை மீட்டனர்.

ஆனாலும், உடம்பெல்லாம் தீப்பிடித்ததில், கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேல் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.. அதனால், மருத்துவமனையில் கொண்டுபோய் உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.. பிறகு, மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் சொன்னார்கள்.

சிகிச்சை: ஆனால், உயர் சிகிச்சை அளிப்பதற்கு, பாட்டியின் கணவரிடம் பணம் இல்லை.. அதனால், வேறு வழியின்றி வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். தன்னால் முடிந்த அளவு வீட்டிலேயே சிகிச்சையையும் தந்தார். ஆனால், பாட்டிக்கு தீக்காயம் ஆறவேயில்லை.. நாளுக்கு நாள் நிலைமை மோசமானது.. கடந்த திங்கட்கிழமை காலை, பாட்டிக்கு அசைவேயில்லை..

இதனால், உறவினர்களுக்கு தகவல் தந்த கணவர், உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.. அந்த ஊர் மக்களும், உறவினர்களும் பாட்டியின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்றார்கள். அவர்கள் குடும்பத்தில் சடலத்தை எரிப்பது வழக்கம் என்பதால், உடலை எரியூட்டுவதற்கான வேலைகள் ஆரம்பமாயின..

சடலம்: சடலத்தை எரிக்க கொண்டு செல்லும் நேரத்தில் டக்கென கண்ணை திறந்துவிட்டார் பாட்டி.. இதைப்பார்த்து உறவினர்கள் அலறியடித்து ஓடினார்கள்.. எனினும், அவரது அருகில் சென்று பேச்சு தந்தார்கள்.. பாட்டியும் பதிலுக்கு பேசினார்.. பாட்டிக்கு உயிர் வந்ததோ இல்லையோ? அங்கிருந்த அனைவருக்கும் அப்போதுதான் உயிரே வந்தது.

இதனால் உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். இந்த குழப்பத்துக்கு இன்னொரு காரணமும் உள்ளது. மருத்துவ சான்றிதழ் இல்லாமலேயே உடலை எரியூட்டலாம் என பெர்ஹாம்பூர் மாநகராட்சி புதிய விதியை அமல்படுத்தியிருந்தது. அதன்படிதான், பாட்டியை நேராக கல்லறைக்கு தூக்கி சென்றுவிட்டார்கள்.

கல்லறையில் அடக்கம்: ஒருவேளை, பாட்டி இறந்ததை டாக்டர்கள் யாராவது பரிசோதித்து உறுதிப்படுத்தி, மருத்துவ சான்றிதழும் தந்திருந்தால் இப்படி ஒரு குழப்பம் ஏற்படாது. கல்லறையில் அடக்கம் செய்யும் நேரத்தில், பாட்டி கண் விழித்தது ஒடிசாவில் பெரும் பரபரப்பை தந்துவிட்டது. இப்போது பாட்டிக்கு ட்ரீட்மென்ட் நடக்கிறது. இந்த ட்ரீட்மென்டை முதலிலேயே தந்திருக்கலாம் போல..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+