சித்தி கொடுமை-இந்தியாவுக்கு தப்பி வந்த ‘ரம்ஜான்’ தாயுடன் சேர்த்து வைக்கப்படுவான்: சுஷ்மா
டெல்லி: சித்தி கொடுமை தாங்காமல் இந்தியாவிற்கு தப்பி வந்த பாகிஸ்தான் சிறுவன் ரம்ஜானை, மீண்டும் தாயுடன் சேர்த்து வைக்க மத்திய அரசு தயார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வழி தவறி பாகிஸ்தான் சென்றடைந்த வாய்பேச முடியாத, காதுகேளாத இந்திய பெண் கீதா, சமீபத்தில் மீண்டும் நாடு திரும்பினார். எல்லைப் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் இடையே சமீபகாலமாக அதிகரித்துவரும் பதற்றத்தைத் தாண்டி, மிகவும் நெகிழ்ச்சியாக இந்த சம்பவம் நடந்தது.

கீதா இந்தியா திரும்பியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்த சிறுவன் ரம்ஜானை மீண்டும் அவனது நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்புவது குறித்த பேச்சு எழுந்தது.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த முகமது கசோல், பேகம் ரசியா தம்பதியின் மகன் ரம்ஜான் (15). கருத்து வேற்றுமையால் அந்த தம்பதி கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் ரம்ஜானை அழைத்துக் கொண்டு வங்கதேசத்தில் குடியேறிய முகம்மது கசோல் அங்கு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், தனது சித்தியின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் ரம்ஜான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு தப்பி வந்தான். ராஞ்சி, டெல்லி என சுற்றித்திரிந்த அவன் தற்போது மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறான்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அந்த சிறுவனை நேரில் சந்தித்தார். அப்போது அச்சிறுவன் தனது தாயை காண பாகிஸ்தான் செல்ல விரும்புவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சுஷ்மா சுவராஜ், ‘ரம்ஜான் பாகிஸ்தான் செல்ல விரும்பினால் அவனை அவன் தாயுடன் சேர்த்துவைக்கும் நடவடிக்கைகளில் இறங்க இந்திய அரசு தயாராக உள்ளது. விரைவில் இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் சென்று அதற்கான பணிகளை மேற்கொள்வர்' என்றார்.
எனவே, விரைவில் ரம்ஜான் மீண்டும் பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications