ஒரு ட்வீட் போட்ட கேரளா முதல்வரை ட்விட்டரில் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: லிபியாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சிக்கித் தவித்த 3 தமிழர்கள் உள்பட 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவை சேர்ந்த 17 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கேரள மக்கள் ஊர் திரும்ப தனது அரசு செலவு செய்ததாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடுப்பாகிவிட்டார்.
|
சுஷ்மா
உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சுஷ்மா உம்மன் சாண்டியின் ட்வீட்டுக்கு ட்வீட் மேல் ட்வீட் போட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
|
சாண்டி
மிஸ்டர் சாண்டி - ஈராக், லிபியா மற்றும் ஏமனில் சிக்கித் தவித்த கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை நாங்கள் மீட்டுள்ளோம். அவர்களுக்கு எல்லாம் யார் செலவு செய்தது? என்று சுஷ்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
|
கேரளா
மிஸ்டர் சாண்டி- லிபியாவில் இருந்து 29 இந்தியர்களை காப்பாற்ற கேரளா செலவு செய்ததாக நீங்கள் தெரிவித்துள்ளீர்கள் என சுஷ்மா ட்வீட்டியுள்ளார்.
|
விவாதம்
மிஸ்டர் சாண்டி- இந்த விவாதத்தை நீங்கள் தான் துவங்கியது. நான் இல்லை. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுவது எங்கள் கடமை. அதை தான் நாங்கள் செய்து வருகிறோம் என்கிறார் சுஷ்மா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications