சுஷ்மா உடல்நிலையில் முன்னேற்றம்... எய்ம்ஸ் டாக்டர்கள் தகவல்
டெல்லி: நெஞ்சுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு (64), நேற்று முன்தினம் மாலை5 மணி அளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் இரவு 10 மணி அளவில், இதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அவர்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.