கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Sushma Swaraj tweets on Shankracharya acquittal
டெல்லி: சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கடவுளின் ஆசீர்வாதத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 23 பேரை புதுச்சேரி நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இதற்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் சுஸ்மா ஸ்வராஜ். சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டது முதல் பாரதிய ஜனதா கட்சி அவரை ஆதரித்து வருகிறது.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சங்கராச்சாரியாரை சுஸ்மா ஸ்வராஜ் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதற்காக பாஜக போராட்டமும் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+