சுஷ்மா ஸ்வராஜ் பிப்ரவரி 5-ல் இலங்கை பயணம்... தமிழர் தலைவர்களையும் சந்திக்கிறார்!!
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிப்ரவரி 5-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்தில் அண்மையில் மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க தாம் விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 5-ந் தேதி சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். மேலும் இந்தியா- இலங்கை கூட்டு குழு கூட்டத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.
பிப்ரவரி 6-ந் தேதி தமிழரின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணம் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின் போது தமிழக மீனவர் பிரச்சனை, ஈழத் தமிழர் விவகாரங்கள் குறித்து சுஷ்மா ஆலோசனை நடத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications