நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து போட்டி: சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்.. களைகட்டப்போகும் ஆட்டம்!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, ஹால்டியாவில் உள்ள துணை பிரிவு அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சில நாட்களுக்கு முன்பு ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இது திட்டமிட்ட சதி என்றும் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்றும் மருத்துமனையில் இருந்தபடி காலில் கட்டுப் போட்ட நிலையில் உருக்கமுடன் தெரிவித்தார் மம்தா.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
மேற்கு வங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் வலது கரமாக விளங்கிய மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி சமீபத்தில் பாஜகவில் இனைந்தார். ''மம்தா தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடட்டும்'' என்று அவர் சவால் விடுத்தார்.

மம்தா மீது தாக்குதல்
இந்த சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் களம் இறங்குவதாக அறிவித்தார். சுவேந்து அதிகாரியும்-மம்தாவும் நந்திகிராமில் நேரடியாக மோதுகின்றனர். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதி என்றும் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்றும் மருத்துமனையில் இருந்தபடி காலில் கட்டுப் போட்ட நிலையில் உருக்கமுடன் தெரிவித்தார் மம்தா.

நாடகமாடுகிறார்
ஆனால் இந்த தாக்குதலை மறுத்துள்ள மேற்கு வங்க பாஜக, ''ஒரு சிறு விபத்தை பெரிய சம்பவம்போல் வெளிக்காட்டி, அனுதாபத்தை வெளிப்படுத்தி மம்தா ஓட்டுகளை வாங்க பார்க்கிறார். தேர்தலுக்காக மம்தாவும், பிரசாந்த் கிஷோரும் செய்த திட்டமிட்ட நாடகம்தான் இது''என்று சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, இன்று ஹால்டியாவில் உள்ள துணை பிரிவு அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோருடன் தொண்டர்கள் புடைசூழ சுமார் 1 கி.மீ பேரணியாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார் சுவேந்து அதிகாரி. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் இதே நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 67 சதவீத வாக்குகளைப் பெற்று, சுமார் 81,230 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications