'அச்சுறுத்தல்'... சு.சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கியது மத்திய அரசு!
டெல்லி: பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி அரசின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. அவரது உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் தற்போதைய இல்லத்தில் அவரது பாதுகாப்புக்கான 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு போதுமான இட வசதி இல்லை; அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகாலத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி அரசு பங்களாவில் வசிக்கலாம். அரசுப் பொறுப்பில் இல்லாத காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பு கருதி அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தற்போது சுப்பிரமணியன் சுவாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications