லலித் மோடியின் வழக்கறிஞர்களாக சுஷ்மா ஸ்வராஜின் கணவர், மகள்.... புதிய தகவல்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஊழல் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்துக்குமான நீண்டகால உறவு குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
லலித் மோடி இங்கிலாந்தில் இருந்து போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்ல பயண ஆவணங்களை பெறுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவியதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியதை ஏற்க எதிர்க்கட்சிகள் தாயாராக இல்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் நிராகரித்துவிட்ட நிலையில் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது
- லலித் மோடிக்கு உதவியதாக சுஷ்மா சுவராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சுஷ்மா ஸ்வராஜின் மகளும், வழக்கறிஞருமான பன்சூரி ஸ்வராஜ் லலித் மோடிக்காக 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருவது தெரிய வந்துள்ளது.
- டெல்லி உயர்நீதிமன்றத்தில் லலித் மோடிக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவராக பன்சூரி ஸ்வராஜின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.
- சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுசல், லலித் மோடிக்கு 22 ஆண்டுகளாக சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார்.
- 22 ஆண்டுகளாக லலித் மோடியின் வழக்கறிஞராக பணியாற்றியதை சுஷ்மா ஸ்ராஜின் கணவர் ஸ்வராஜ் கவுசல் உறுதிசெய்து உள்ளார்.
- லலித் மோடிக்கு உதவ சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாக கூறப்படும் இங்கிலாந்துவாழ் இந்திய வம்சாவளி எம்.பி. கெய்த் வாஸ், சுஷ்மா ஸ்வராஜின் உறவினர் ஜோதிர்மாய் கவுசல், இங்கிலாந்தில் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க உதவ முன்வந்ததும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications